Friday, September 19, 2008

ஏதோ நினைவிலே..

என் இதயத்தில்
இளைப்பாறும் உன்
இனிய நினைவுகள்
என்ன நினைத்துக்கொண்டு
இருக்கின்றன?
சீக்கிரமே கிளம்பச்சொல்!
அவை வளர்த்துவிட்ட
கனவுகளை நான் எங்கு
சேமிப்பது...
நீதான் கனவுகளை காதால்
கூட கேட்க மறுக்கிறாயே..
பிறகெப்படி நனவாக்குவாய்?
அதனால் எல்லையற்று
குவியும் உன் நினைவு தரும்
கனவுகளுக்குள் என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!
இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
மன்னித்துவிடு இனியும்
இரங்காதாம் என் இதயம்
..அட இன்னுமா போகவில்லை
...சீக்கிரம்..!!

Friday, September 12, 2008

வணக்கம்!


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மது :) ஒரு சில நாட்களாக யோசிக்கிறேன் ஒரு பதிவு எழுத வேண்டுமென்று...ஆனால் என்ன எழுதுவதென தெரியவில்லை. பயப்பட வேண்டாம், 'என்ன எழுத' என்று இன்னுமொரு தரம் போர் அடிக்க எண்ணமில்லை. Exams க்கு வாழ்த்திய friends க்கு ரொம்ப நன்றிகள். விரைவில் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன்.