Wednesday, August 20, 2008

The gaps between my posts are about to get longer than usual as my days are so hectic so that I am not even able to reply the comments you leave on my posts. So, friends, please don't mistake me if you don't receive any words from me on your blogs. All because I am lacking of time and this is not going to be so long. And I will recover from this hibernative phase of blogging very soon. Until then, watch this space. And Sorry!!!

Take Care you all :)

Monday, August 18, 2008

பக்கா கணிணிப் பொறியாளர் Vs பக்கா குடும்ப விளக்கு

ஈ-மெயிலில் படித்தது. பகிரலாம் என்று நினைத்தேன் :)

கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர்
மனைவி: பக்கா குடும்ப விளக்கு
கணவன்: அன்பே, வந்துட்டேன்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR கம்ப்யூட்டர்

:))

Wednesday, August 13, 2008

Serve yourself some peace :)

Just giving my thoughts at this moment a type. Sitting near the window side, a hot cup of coffee with its wavy streams coming off and I love this with the combination of the rain pouring off crazily outside. The tick-tick-tock-tick rhythm the rain plays on my window is a great soothing to my ears!

Don't ask me why I have chosen to write this post in English. I don't even know myself. Started off without realising but now thought to just continue so please be ready to bear my scribbles..lolz..Kidding. Having had a quick scan through all my posts this morning I realised that I am not maintaining my blog under a particular topic..... neither a fixed template!. Well, this proves the fact that I didn't start this blog with a specific aim which was not quite healthy to keep up a blog well. But, oh well, as long as I write "something" non-offensively it should be fine isnt' it! I don't know!

The sky is still open...and the earth is still continuing to absorb those countless drops of water! World is beautiful.. Look out of the window, leaving your sadness, sorrows somewhere behind and see the colourful and happy world out there. There are millions of joys for every sorrow, pick out the best. Erase away your misfortunes. Don't stand there in the mist, walk out and you will see the beautiful world waiting for you! Many little joys that are waiting only for you!

Whoever you are reading this, I wish you have..every happiness that you wish for in your life and may you get many more like this very moment of mine when tranquility is a word of mine/yours!!

ஒரு கேள்வி (?)

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மேகம் கூட கருக்கும்...ஆனால், மழை மட்டும் பெய்யவே பெய்யாது. அது என்ன?

நான் இப்போது கேட்டு கொண்டு இருக்கும் ரேடியோவில் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தரம் இரண்டு தரம் கேட்டுவிட்டு அத்தோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை கேட்டு என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறாங்க. பதில் அனுப்பும் intention ஒன்றும் எனக்கு இல்லை. இருந்தாலும் விடை என்னவாக இருக்கும் என குழம்புகிறேன். இது ஒரு கடி கேள்வியாகவும் இருக்கலாம், விடுகதையாகவும் இருக்கலாம், உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் :))

விடை அறிந்தவுடன் (ரேடியோவில் முடிவில் சொல்ல தானே வேணும்) உங்களுக்கு நான் சொல்கிறேன்.

Shoot out your answers buddies!!!

Update:

பதில் : பட்டாசு!

:)

Sunday, August 10, 2008

நினைவின் நேசம்

அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்

*
உரம் போட்டு
வளர்ப்பது
போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

*
அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?

*
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிர்றது

*
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என
நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

Friday, August 08, 2008

இதுவும் காதல்தான்!

அது ஒரு வெள்ளிக்கிழமை. சாலையில் நடந்துகொண்டே யோசிக்கிறேன் நான், "நான் எப்படி அப்பாவிடம் சம்மதம் வாங்குவது. எப்படி எடுத்து சொல்வது. அதெல்லாம் சரிப்பட்டு வராது. உனக்கு ஒன்றும் புரியாது..'இல்லை என்றால் இல்லைதான்' என்று அடித்த மாதிரி சொல்லி விட்டால்? எனது ஆசையில் மண்ணை போட்டு விட்டால்? சுமதியை பேச சொல்லலாமா...அது சரிப்பட்டு -

"ஏய் லூசு...நில்லுடி...யாழினி...நில்லு"
நின்றேன்.
"எங்கே நான் கத்துகிறேன். நீ எங்க யோசனையை வைத்துக்கொண்டு போகிறாய்.."

"ஐயோ சுமதி....உன்னைத்தான் யோசித்தேன். உன்னை விட்டால் வேறு யாரு எனக்கு தோழி.."

சுமதி ஒரு மாதிரியாகவே என்னை பார்த்தாள். "என்ன மேடம், சொல்லுங்க....செய்ய முயற்சி செய்றேன்"

மெதுவாக அவளிடம் அப்பாவை பார்த்து பேசும் படி கேட்டேன். எடுத்தவுடனேயே மறுத்தாள். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். ஒரு மாதிரியாக ஒப்பு கொண்டாள். சனிக்கிழமை அதாவது நாளை அப்பாவை வந்து சந்திப்பதாக சொல்லி சென்று விட்டாள். பயம் கொஞ்சம் கவலை கொஞ்சம் என்று திக்கு தெரியாமல் சிதறும் சிந்தனைகளோடு வீடு சென்றேன் நான்.

காலை 10 மணி ஆயிற்று. இன்னும் காணவில்லை சுமதியை. வீட்டுக்கு போன் பண்ணினால் கிளம்பிவிட்டாள் என்கிறார்கள். இவள் வராமல் போனால் வாழ்க்கை முழுக்க தனி ஆளாக நிற்கவேண்டும் யாழினி. சுமதி சீக்கிரம் வந்தால் தானே அப்பாவை போய் பார்த்து பேச முடியும். 12 மணிக்கு பின் அனுமதிக்கவும் மாட்டார்கள். என்று யோசித்துக்கொண்டு நின்றவளை வழமைக்கு கொண்டு வந்தது காலிங் பெல் சத்தம். ஓடிப்போய் திறந்தவளுக்கு அதிர்ச்சி. அங்கே சுமதியுடன் அவள் அண்ணன் ஷிவாவும். சிவாவை விரும்பிய காலம் இப்போது வெறும் கனவாக இருந்தது யாழினிக்கு. அப்பாவுக்காக, அவரிடம் கேட்காமலே மறக்க முடிவு செய்த காதல் அவளுடையது. பலமுறை பேசி சிவாவை தன்னை மறக்க சம்மதிக்க வைத்தது பெரிய கதை. அவர்களது காதலுக்கு வயது வெறும் ஒரு மாதம் தான் ஆகியிருந்தது அப்போது. ஆனால், இன்னமும் இருவரும் மறக்கவில்லை. மறந்த மாதிரி காட்டிக்கொண்டார்கள். . .

"யாழினி நான் அப்பாவை வர்ற வழில கண்டு பேசிட்டேன். அவருக்கு இதிலே உடன்பாடு இல்லை. சொன்னா கேட்கவே மாட்டேங்கிறார்."

"என்ன சுமதி, நான் என்ன எனக்காகவா சொல்கிறேன். அவருக்காகதானே. என்னை தனி மனுஷனாக இன்னொரு கல்யாணமும் செய்யாம வளத்தவரு. அதுவும் ஒன்னு ரெண்டு இல்லை, 21 வருஷம்! அவருக்கு நான் இதை கூட செய்ய முடியலைன்னா..நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்." சொல்லும் போதே கன்னங்களை நனைத்தது கண்களில் இருந்து கொட்டிய அன்பின் அடையாளம்.

இப்போது ஷிவா பேசினான். அவன் பங்குக்கு ஏதாவது கடமைக்கு என்றாலும் சொல்லியாக வேண்டும் என்பது போல...அப்படித்தான் அவளுக்கு தோன்றிற்று.
"யாழினி, அப்பாக்கு வயசு ஆயிடிச்சி. அவர் தன்னோட வாழ்க்கையை விட உன்னோட வா...சாரி உங்களோட வாழ்க்கைதானே முக்கியமா படும்.."

"இப்போ என்ன குறையுது? எனக்கு அவங்க நல்ல வாழ்க்கை தராங்க. நடுத்தர குடும்பந்தான். ஆனா, நாங்க என்ன பெரிய கோடீஸ்வரங்க இல்லையே. அது மட்டும் இல்லாம, அப்பாக்கு இதுவரை காலமும் பொருத்தமான tissue type ஓட யாரோட கிட்னியும் கெடைக்கல. இப்போ அவுங்க பையனோட கிட்னி பொருந்துது. ஆனா, கொடுக்கிறதுக்கு பணம் இல்லை. அதுக்கு பதிலா என்னை மருமகளா அந்த பையனையே கட்டிக்க சொல்றாங்க. இதில என்ன பிழை? நான் என்னிக்கோ கல்யாணம் பண்ணதானே வேணும். திங்கள் ஆப்பரேசன். அன்னிக்கு ஆப்பரேசன் பண்ணலேன்னா ..அ...அ..அப்பாவோட..உயிருக்கு ஆபத்து.."
சொல்லி முடிக்க முன் அழுகை என் பேச்சை தடுத்தது.

என்ன சொல்வதென்று புரியாமல் சுமதி அவளையே பார்க்க, தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....
...எதை பற்றியும் கவலை படாமல் ஒரு முடிவு எடுத்தவளாய் "சம்மதம்" என்று மாப்பிளையின் அக்கா கேட்டபடி SMS அனுப்ப கைத்தொலைபேசியை எடுத்தேன் நான்...தந்தையின் அன்புக்கு செலுத்தும் காணிக்கை எதுவென்றாலும் சந்தோஷமாய் ஏற்பேன் என்ற உறுதியோடு.

-முற்றும்-

(கதையை எழுதி முடித்ததும் திருப்பி படிக்கவில்லை நான். பிழைகளை மன்னியுங்கள்)

என்ன சொல்ல

எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வானொலி கேட்பதுண்டு -கேட்க தோன்றினால். அதில் ஒரு நிகழ்ச்சி மிஸ் பண்ணவே மாட்டேன் என்று சொல்லலாம். அதாவது ஒரு கருத்து சொல்லக்கூடிய விஷயத்தை அல்லது ஏதாவது ஒரு நகைச்சுவையான விஷயத்தை கலந்துரையாடுவார்கள். அதில், சில மாதங்களுக்கு முன்பு ஒலி பரப்பான விடயம் இன்னும் என் மனதை விட்டு அகல வில்லை.

இப்போது கூட, அந்த நிகழ்ச்சியின் பெயரை கேட்டால் உடனே நினைவுக்கு வருவது குறிப்பிட்ட அந்த கலந்துரையாடல்! மேலோட்டமாக சொல்ல போனால், சமூகத்தில் ஆண் பெண் சம்பந்த்தபட்ட ஒரு தலைப்பை உரையாடினார்கள். அதில் சரி பிழை என்று சொல்லும் அளவுக்கு எனக்கு வயது, அனுபவம் பத்தாது என்று நினைக்கிறேன்... ஒரு விடயம் தவிர! அதாவது, ஒரு நேயருக்கு பதில் சொல்லும் வகையில் அந்த தொகுப்பாளர் குறிப்பிட்ட விடயம் - எந்த ஒரு பெண்ணும் ஒரு வைத்திய தொழில் புரியும் ஆணை திருமணம் செய்ய விரும்ப மாட்டார் என் என்றால், வைத்திய தொழில் என்னும் போது வீட்டில் செலவிட நேரம் கிடைக்காது!
வைத்திய தொழில் மட்டுமல்ல இது இன்ஜினியரிங் போன்ற தொழில்களில் கூட என்றார்.எனக்கு இதில் புரியாத விடயம் என்ன என்றால், உலகில் இந்த கடமைகளில் ஈடுபடும் ஆண்களோ பெண்களோ இல்லையா? அல்லது அவர்கள் திருமணம் செய்து குடும்பமாக வாழ வில்லையா? என்ன ஒரு நகைச்சுவையான விடயம் அவர் சொன்னது! நினைத்தால் சிரிப்பும் வருகிறது அதே வேளை கோபமும் வருகிறது.
பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களைத்தான் ஆண்கள் துணையாக ஏற்றுக்கொள்ள யோசிப்பதுண்டு காரணம் அவர்கள் வீட்டில் உள்ள கடமைகளில் இருந்து தவறக்கூடும் என்பது. இது கூட சரி என்று நான் சொல்ல வரவில்லை...ஆனால், மேல் குறிப்பிட்ட தொழில் புரியும் ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால், அதே பிரிவில் இருக்கும் பெண்களின் நிலைமையை நினைக்க முடியவில்லை -அந்த தொகுப்பாளரின் பார்வையிலிருந்து பார்க்கும் போது. என்ன ஒரு மடமையான எண்ணம்!

அவர் சொன்னது நிகழ்ச்சிக்கு அவசியமானதோ அல்லது அழுத்தி சொல்லப்பட்டதாகவோ இல்லாவிடினும், சொன்ன விடயம் தவறு என்று நினைக்கிறேன். யோசித்து சொன்னாரா, இல்லை வாய்க்கு வந்ததை உளறினாரா, அது தெரியாது...ஆனால், இப்படியான லைவ் நிகழ்ச்சிகளில் கவனமாக கதைப்பது தொகுப்பாளர்களுக்கு இன்றியமையாதது

Friday, August 01, 2008

A for Apple

இன்ப அதிர்ச்சி என்று சொல்லி என்னை இந்த தொடர் விளையாட்டுல மாட்டிவிட்டுட்டாங்க M Saravanakumar. நான் அடிக்கடி விசிட் பண்ணும் தளங்களோட list எழுதணும், அதிலும் என்னோடத எழுத கூடாது அப்பிடி இப்பிடி என்று நான்கு விதிமுறைகள். அதில் நாலாவதுதான் என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிக்கல். சரி, இதோ என்னோட list.

A:
AOL
B:
BMJ Journal, Blogger அண்மைக்காலமாக! மற்றும் BBC.
C: Cooltoad பாடல்களை download பண்ண. Cineworld ரொம்ப முக்கியம் ;)
E: E-Journals எப்பவாவது தேவைப்படும்...அடிக்கடி செல்வது இல்லை.

F: Facebook :))
G: Google, ofcourse!
H: Hi5 நான் மட்டும் விதிவிலக்கல்ல
I: ICC Love it!!
J: Jane Norman Mostly looking around only;)
M: கவிதைகள் எனப்படும் -M Saravanakumar, MSN
N: National Express செலவு செய்யா தயாராக செல்ல வேண்டிய தளம். Grr!
O: Oosai பாடல்கள் கேட்க
R: Raaga, Rose for you பாடல்கள் கேட்க, download பண்ண
T: T-Mobile
U: Usertube என் நண்பி மூலமாக தெரியும், எப்போதாவது உச்சகட்ட Bore என்றால் செல்வேன். For தமிழ் videos.
W: Waterstones, WHSmith புத்தகங்களுக்காக! விக்கிபீடியா lol :)
Y: Yahoo, Youtube Time passing/consuming!

அப்பாடா! ;)
இனித்தான் கடினமான வேலை! இந்த 4 rules ல் 3 done!

Rules:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.

உண்மையில் நான் tag பண்ணும் அளவுக்கு blogger friends இன்னும் சேரவில்லை காரணம் நான் blogworld க்கு புதிது. இருந்தாலும் என்னை tag பண்ணிய சரவணகுமாருக்கு நன்றிகள்.
கோவிக்காதிங்க pls!

*I ll definitly tag 3 people once Ive got known enough in this blogworld :) Thanks guys.