Wednesday, November 19, 2008

காதல் நிரபராதி...


அந்த கடைசி நாளொன்றில்
என் கண் மை கரைந்தது...நீ
உன் காதலை இடம் பெயர்த்த போது!
மனம் உடைந்தது,
நீ என் புன்னைகையை நிரந்தரமாய்
திருடி சென்றபோது!

வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....

நீ இருட்டறையில் தள்ளிவிட்ட
என் இதயம் இன்னும்
துடிக்கிறது...
விடுதலை வேண்டி
கூண்டுக்குள்
இருக்கும்
சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..

மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...

Monday, November 17, 2008

தமிழ் தத்துவங்கள்

  • நாய்க்கு நாலு கால் இருக்கலாம்...ஆனா அதால லோக்கல் கால்,எஸ் டி டி கால், ஐ எஸ் டி கால்...ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது
  • கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்...காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம்...ஆனா, ஐயர் ஆத்துல மீன் புடிக்க முடியுமோ?
  • திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்.

  • என்னதான் உன் தலை சுற்றினாலும் உன் முதுகை நீ பார்க்க முடியுமா?

  • மீன் புடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்...நாய் புடிக்கிறவனை நாயவன்னு சொல்ல முடியுமா?

  • என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது!

  • தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்....முடி கொட்டினா வலிக்குமா?
  • ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்....காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமோ?
  • பொங்கலுக்கு கவன்மெண்ட் லீவு குடுப்பாங்க....ஆனா, இட்லி தோசைக்கு குடுப்பாங்களோ!

  • கோலமாவில் கோலம் போடலாம்...கடலை மாவில் கடலை போட முடியுமா?

  • லைப்ல ஒண்ணுமே இல்லன்னா போர் அடிக்கும்...தலையிலே ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்....
  • ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,... பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாபிடனும்...

Friday, November 07, 2008

மேகலா -ஷக்தி

அப்பப்போ நான் சீரியல்ஸ் பார்ப்பதுண்டு. அதில் மேகலாவும் ஒன்று. மேகலாவில் எப்போதுமே மற்ற சீரியல்கள் மாதிரி அழுகையாக மட்டும் இல்லாமல் நகைச்சுவையையும் கலந்து தருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலை நான் appreciate பண்ணுவதுண்டு.


ஆனால் அதில் வரும் ஷக்தி என்ற பாத்திரம் என்னை உண்மையில் கோவப்பட செய்கிறது. உலகத்தில் இப்படியும் ஒரு பெண் இருக்க முடியுமா. கொஞ்சம் exaggerate பண்ணுகிறார்கள் போல இருக்கிறது. ஷக்தி வரும் சீன்ஸ் என்றாலே முகத்தை திருப்பி வைத்தால் பார்பவர்களுக்கு ஆரோக்கியம். ஒரு பெண் எப்படி இருக்க கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கலாம் இந்த ஷக்தி கேரக்டர் ஆனாலும் சகிக்க முடியாமல் உள்ளது. ஒரு துரும்பு நல்ல விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கேரக்டர். பிழையான விஷயங்களை மட்டும் சரியாக புரிந்து கொள்கிறா. வர வர கரெக்டரை இன்னும் aggressive ஆக மாற்றுகிறார்கள். தாங்க முடிய வில்லை. கொஞ்சம் கூட பொறுமை அடக்கம் இல்லாத பெண். ஒரு விஷயத்தில் கூட விட்டு கொடுக்க யோசிக்காத சுயநலவாதி. உண்மையில் இப்படி ஒருவர் உலகத்தில் இருப்பார்களா? They should not carry on making this character more and more aggressive like this. People who watch it gets fed up with whatever she does all the time. If she can listen to her friend that she should not obey her husband for any reasons, why can she never listen to what her husband or parents say. Its just an impossible character. Well, I haven't come across anyone like this. மிகவும் short tempered ஆன typical மாமியார் கூட இறங்கி போகிறார். ஆனால் இந்த ஷக்தி கேரக்டர் வெறும் சுயநலம் நிறைந்த ஒரு பாத்திரமாகவே உள்ளது.

ps: தொடர்கதை சீக்கிரம் தொடரும் :)