Tuesday, August 11, 2009

புரிதல் என்பது

உலகத்தில் பல விடயங்களை எம்மால் முழுதாக புரிந்து கொள்ளவோ விளங்கிக்கொள்ளவோ தெரியவில்லை/முடியவில்லை. அந்த சக்தி யாரிடமும் இல்லை என்பதே உண்மை. கற்றல் கூட எம்மால் நினைக்கும் அளவுக்கு முடியாது. ஒருவன் இறக்கும் போது கூட "கற்றது கைம்மண்ணளவு" என்பது உண்மையாகத்தான் இருக்கும். ஒருவரால் கூடிய அளவு 5-10% தான் அவரது மூளையை பயன்படுத்துகின்றார்களாம். இது ஒன்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த பட்டதோ என்றெல்லாம் எனக்கு தெரியாது.

அப்படி இருக்கும் போது, இன்னொருவரை எம்மால் எந்த காலத்திலும் முழுதாக புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் எங்களை எங்களாலே புரிந்து கொள்வது என்பது சிலசமயங்களில் முடியவில்லை. நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்க வைக்கும் தருணங்கள் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருந்திருக்கும். ஒரு மனிதனை சந்தோஷமான நிமிடத்தை விட கோபமான நிமிடம்தான் தடுமாற வைக்கிறது.
கோபம் என்பது என்ன? எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தால் வருவதா?
பல சமயங்களில் எனக்கு கோபம் வருகிறது என்று தெரிந்தால், அமைதியையே பதிலாக கொடுப்பேன். கோபம் தணியும் வரை பேச்சு வார்த்தை குறைவாகவே அல்லது அறவே இல்லாமல்தான் இருக்கும். ஆனால் அதே நேரம் என்னில் இருக்கும் weakness என்ன என்றால், கோபம் சட்டென்று தணிந்துவிடும். சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் செல்ல நானே எல்லாவற்றையும் மறந்து பழையபடி மாறிவிடுவேன். மன்னிப்பு என்னிடம் தாராளமாகவே கிடைக்கும். அப்போதெல்லாம் நினைத்து கொள்வேன் என்னை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமையே இவர்கள் இப்படி நடக்க காரணமாக இருக்கிறது. சரி பரவாயில்லை, ஐந்து விரல்களும் ஒரே மாதிரியா என்ன.
அதற்காக நான் ஒரு நாளும் அனாவசியமாக கோபப்பட்டது இல்லை என்றில்லை. எனக்கும் அர்த்தமற்ற கோபங்கள் வருவதுண்டு ஆனால் மிக குறைவு. அம்மாவிடம் சில சமயம் கோபம் வரும் ஆனால் சில நிமிடப்பொழுதில் அது இல்லாமல் போய்விடும். எனது அடுத்த சொற்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மன்னிப்பு கேட்பதாகவே இருக்கும்..
ஆனால் அதே சமயம் எனது நண்பி ஒருத்தியுடன் இரண்டு வருடங்கள் பேசாமல் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் இருந்திருக்கிறேன். இன்னொருத்தியுடன் ஒரு வருடம் பேசாமல் இருந்திருக்கிறேன். இதெல்லாம் நான் ஆறாம் ஏழாம் கிரேட் படிக்கும்போதே.


கோபம் என்பது நம்மை ஆட்கொள்ள முதலே நாம் கோபத்தை ஆள தெரிந்திருந்தால் நல்லது. கோபம் எப்போது உருவாகிறது -எமக்கு பிடிக்காத ஒன்றை இன்னொருவர் செய்யும் போது அல்லது எமக்கு பிரியமான ஒன்று இல்லாமல் போகும் போது தானே.
இதற்கெல்லாம் காரணம் எந்த அளவு ஒருவரின் எதிர்பார்ப்புக்கள் உள்ளது என்பதே. அதேவேளை ஒரு மனிதன் எதிர் பார்ப்புக்கள் இல்லாமல் வாழவும் முடியாது. இந்த எதிர்பார்ப்புக்களே சின்ன சின்ன சந்தோஷங்களை தருபவை. ஏன், எதிர்பார்ப்புக்களே வாழ்க்கையின் அடிப்படையாக அமைகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு என்பது போல, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. உங்களால் முடிந்தளவு இந்த எதிர்பார்ப்புக்களை மற்றவர்களிடம் இருந்து குறைத்தால், ஏமாற்றங்கள் குறையும். ஏமாற்றங்கள் குறைந்தால் கோபம் குறையும்.
முயன்ற வரைக்கும் மற்றவரின் இடத்திலிருந்து ஒரு விடயத்தை அறிவது சிறந்தது.. Empathy, as they say. ஒரு நோயாளியை பார்க்கும் போது, எந்த அளவு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் இடத்தில் இருந்து யோசித்தால் தான், அவரின் வேதனையை புரிந்துகொள்ள முடியும். இதே போலதான், கோபம் எம்மை ஆக்கிரமிக்கும் போது எமது கோபம் நியாயமானதா என்று ஒரு கணம் யோசிப்பது அவசியம்.

அதே போல, அடுத்தவர்கள் எம்மில் கோபப்படுகிறார்கள் என்றால் உண்மையில் அவர்கள் கோபத்தில் ஞாயம் உண்டா, கோபப்பட வைத்த நாம்தான் காரணமா, இல்லை அவர்களுக்கு விளங்கும் படி அமைதியாக எடுத்து சொல்வதுதான் சரியா என்று யோசிக்க வேண்டும். அப்படி உங்கள் கோபத்தை ஒருபுறம் வைத்துவிட்டு சிந்தனை செய்தீர்களேயானால், பேச்சு முடிவு இரண்டும் தெளிவாகும். என்று அடியேன் நினைக்கிறேன்.
இதையெல்லாம் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன் :)
இந்த பதிவுக்கு குறிப்பிட்ட நோக்கம் எல்லாம் கிடையாது. இந்த சிறியவளின் எண்ணப்பகிர்வு மட்டுமே!

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சற்றுப்பொறுங்கள்! நானும் யார் மீதாவது கோபப் பட்டு, ஒரு ரவுண்ட் வந்தபிறகு, இதற்குச் சரியான பதிலைத் தருகிறேன்:-}

உணர்வுகள், நம்மை ஆட்டி வைக்கும் போது எதையுமே அதன் உண்மையான தரத்தில் புரிந்துகொள்ள முடிவதில்லை.

உணர்வுகள் நமது கட்டுப் பாட்டின் கீழ் வரும் போது, புரிதல் என்பது இயல்பாகவே நிகழ்கிறது!

ஆபிரகாம் said...

எனது வாழ்விலும் கடந்துவந்த நிகழ்வுகள் இவை... `இகவும் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்...

நட்புடன் ஜமால் said...

அப்படி உங்கள் கோபத்தை ஒருபுறம் வைத்துவிட்டு சிந்தனை செய்தீர்களேயானால், பேச்சு முடிவு இரண்டும் தெளிவாகும். ]]


நிதர்சணம்.

அந்த சிந்தனை அந்த நேரத்தில் வர வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

ஏங்க ப்லாக்க மூடுறீங்க ???

யாழினி said...

மது தாங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவர். ஆனால் தாங்கள் வலைப் பதிவை விட்டு வெளியேறப் போவதாக கூறியுள்ளீர்கள் கவலையாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி தாங்கள் மென்மேலும் பல படைப்புக்களை அளிக்க வேண்டும் என்பதே எனது அவா. நண்பி நான் இத் தருணத்தில் த‌ங்க‌ளுக்கு நான் ஒரு விருது கொடுத்துள்ளேன்

www.nilavil-oru-thesam.blogspot.com


ஏற்றுக்கொள்ள‌வும்...

Admin said...

பதிவுகள் அருமை உண்மையை சொல்லி இருக்கின்றீர்கள்...

Several tips said...

நன்றாக இருக்கிறது

ப. அருள்நேசன் said...

ஹாய் மது,
சின்னவள் என்று சொல்லிக்கொண்டு, பொளியும் உபதேசங்கள் ம்ம்

//இன்னொருவரை எம்மால் எந்த காலத்திலும் முழுதாக புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் எங்களை எங்களாலே புரிந்து கொள்வது என்பது சிலசமயங்களில்முடியவில்லை. //

100% உண்மை, ஜதார்த்தங்களை பேசுறீங்க
வாழ்த்துக்கள்

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..