Wednesday, February 29, 2012

முதல் முறையாக..

10 வருடங்களுக்கு பிறகு நட்பில் ஒரு விரிசல்...
கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை.
இப்படி உங்களில் யாருக்கேனும் நடந்ததுண்டா?  எங்கள் மூவரின் நட்பை பார்த்து வியக்காத ஆட்களே இல்லை. அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காத நண்பிகள். இப்போது, ஒரே ஒரு நாளில் எல்லாம் உடைந்து விட்டது. வருடங்கள் செல்ல செல்ல, கடமைகள் கூடியது, நேரம் குறைந்தது. எப்போதாவது சந்திப்பது தான்...ஆனால் நட்பு தொடர்ந்தது. பல பேர் கண்ணூறு படுத்தி விட்டார்கள் என்று நினைக்கிறேன். தினமும் ஸ்கூலில் சந்திக்கும் போது கூட வராத சண்டை இப்போது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட நாங்கள் இன்னொருவரை காயப்படுத்தும் படி பேசியதில்லை. ...... இது வெறும் பாடமாக மட்டும் அமைந்துவிடவேன்றும் என்று ஆசைப்படுகிறேன்.


No comments: