Monday, July 07, 2008

உவமைக்காதல்!


நீ காட்டியது அன்பு அல்ல
வெறும் அன்பு மாதிரி என்று
தெரியவில்லை அன்று!
உன் வார்த்தைகள் உண்மை அல்ல
வெறும் உவமை என்று
புரியவில்லை அன்று!


அன்று முதல் அத்தியாயத்திலேயே
முற்றுபுள்ளி வைத்து விட்டாய் நீ
இன்று கடைசி அத்தியாயத்தை
கனவு காணும் வரை நான்


நீ எங்கோ நான் எங்கோ
கவிதையில் மட்டுமல்ல
கடைசி வரை!

13 comments:

Kumiththa said...

நல்ல படைப்புகள். முக்கியமாக இந்த கவிதை கலக்கலோ கலக்கல். எனக்கு நல்லா புடிச்சுது. தொடர்ந்து இது மாதிரி எழுத எனது வாழ்த்துக்கள்.

Mathu said...

குமித்தா
கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் :) உங்களுக்கு பிடித்ததில் சந்தோஷம்

Anonymous said...

wow. Very nice poem. Keep up your good work!

Mathu said...

Thanks anonymous

Divya said...

அருமையான கவிதை மது:))

\\உன் வார்த்தைகள் உண்மை அல்ல
வெறும் உவமை என்று
புரியவில்லை அன்று!\\

யதார்த்தமான உண்மை;


\\கடைசி அத்தியாயத்தை
கனவு காணும் வரை நான்
நீ எங்கோ நான் எங்கோ
கவிதையில் மட்டுமல்ல
கடைசி வரை!\\

மனதை தொட்ட வரிகள்:)

மிக அழகாக வார்த்தைகளை கோர்த்திருக்கிறீர்கள் மது, தொடர்ந்து பல கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்!!

Mathu said...

திவ்யா :)
உங்கள் விரிவான கருத்திற்கு மிகவும் நன்றி :)
வாழ்த்துக்களுக்கு இன்னுமொரு நன்றி :)
மீண்டும் வருக!

MSK / Saravana said...

//உன் வார்த்தைகள் உண்மை அல்ல
வெறும் உவமை என்று
புரியவில்லை அன்று!//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வரிகள்..

MSK / Saravana said...

நீங்கள் வேறேறொரு நிறத்தில் எழுதியது மட்டும்..

//வெறும் அன்பு மாதிரி என்று
வெறும் உவமை என்று
முற்றுபுள்ளி வைத்து விட்டாய் நீ.

கனவு காணும் வரை நான்
கடைசி வரை!//


அழகான கவிதை..
:)

கண்டீர்களா..

Mathu said...

M.Saravana Kumar said...
//உன் வார்த்தைகள் உண்மை அல்ல
வெறும் உவமை என்று
புரியவில்லை அன்று!//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வரிகள்..

நன்றிகள் சரவணகுமார் :))

Mathu said...

M.Saravana Kumar said...
நீங்கள் வேறேறொரு நிறத்தில் எழுதியது மட்டும்..

//வெறும் அன்பு மாதிரி என்று
வெறும் உவமை என்று
முற்றுபுள்ளி வைத்து விட்டாய் நீ.

கனவு காணும் வரை நான்
கடைசி வரை!//


அழகான கவிதை..
:)

கண்டீர்களா..

Thanks :)இல்லை...காணவில்லை. காரணம், இது கற்பனை..hehe

MSK / Saravana said...

//இல்லை...காணவில்லை. காரணம், இது கற்பனை..hehe //

இதெல்லாம் ஓவர்..

MSK / Saravana said...

:)
:)

Mathu said...

M.Saravana Kumar said...
//இல்லை...காணவில்லை. காரணம், இது கற்பனை..hehe //

இதெல்லாம் ஓவர்..

ஏன் ஓவர்? கவிதை என்றாலே கற்பனை தானே? நம்பாவிட்டால் என்ன செய்வது! lol ;)