Sunday, January 04, 2009

Butterfly Award

குறுகிய காலத்தில் அறிமுகமாயிருந்தாலும் என்னை நினைவு கூர்ந்து, விருது வழங்கிய இரவீ க்கு எனது நன்றிகள் :) நான் வலைப்பூவில் இணைந்து சில மாதங்கள் என்பதாலும், நேரம் இடம் கொடுக்காத காரணத்தால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவுகள் எழுதுவதாலும், இந்த வலைப்பூ வட்டத்தில் இருக்கும் ஏனைய நண்பர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத முடியவில்லை.
இருந்தாலும்.....நான் ஆடிக்கு ஒருக்கா ஆவணிக்கு ஒருக்கா என்று பதிவு எழுதினாலும், தவறாமல் வந்து படித்து பின்னூட்டம் இடும் இனிய நண்பர்கள் உள்ளார்கள். அதில் குறிப்பிடும் படியாக, குமித்தா, சரவணகுமார், திவ்யா, புதியவன், அதிரை ஜமால் & அண்மைக்காலமாக இரவீ, விஜய், வண்ணத்துபூச்சியார் (சூர்யா), பூர்ணிமா சரண் மற்றும் பலர்.

உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான நன்றிகள்.

இந்த Butterfly Award யாருக்கு கொடுப்பது என்று யோசித்தேன், அனேகமாக இங்கு குறிப்பிட்டவர்கள் விருது பெற்றவர்கள் ;). இன்னும் விருது பெறாமல் இருக்கும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்துள்ளேன்.....நீங்கள் ஏற்கனவே கொடுக்கப்படவராக இருந்தால் மன்னிக்கவும் :) இதையும் ஏற்று கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
  • ஒரு பதிவு கூட விடாமல் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிடும் இனிய தோழி குமித்தா வுக்கும்

  • அதே போல் சளைக்காமல், நான் பதிவு பக்கமே வராமல் இருந்தாலும் விருது, தொடர் விளையாட்டுகளில் என்னை மறக்காமல் மாட்டிவிடும் சரவணகுமார் க்கும்

  • என் வலைப்பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும், சிறந்த இடுகைகளை எழுதும் சகாராவின் புன்னைகை க்கும்

இந்த Butterfly விருதை வழங்குகிறேன். இதற்கு காரணமாக இருந்த இரவீக்கும் எனது நன்றிகள் :)

13 comments:

- இரவீ - said...

உங்களுக்கும் , விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
சரி, கவிதை எங்கே ? எதிர்பார்த்து காத்திருக்கோம் - தொடர்ந்து கலக்குங்க.

Kumiththa said...

வாழ்த்துக்கள் மது! இது போல் இன்னும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.விருதுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

வாங்கியவருக்கும்

வழங்கியவருக்கும்

வாழ்த்துக்கள்

புதியவன் said...

இரண்டாவது முறையாக
பாட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு
வாழ்த்துக்கள் மது...

ப. அருள்நேசன் said...

//என் வலைப்பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும், சிறந்த இடுகைகளை எழுதும் சகாராவின் புன்னைகை க்கும்//

//இந்த Butterfly விருதை வழங்குகிறேன்.//

நன்றி மது,

ஆனால் தங்களுடைய இணைய தளத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை வன்மையாக (மறுக்கிறேன்) எதிர்க்கிறேன். தாங்கள் busy ஆக இருப்பதனாலேயே அதிகம் தொல்லை செய்வதில்லை. ஆனாலும் உன்னிப்பாக கவனிக்கிறோம், அருமயான கவிதாயினி ஒருவர் உருவாகிறர்.
அன்போடும் வாழ்த்துக்களோடும்

ப.அருள்நேசன்

Mathu said...

Ravee (இரவீ ) said...
உங்களுக்கும் , விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
சரி, கவிதை எங்கே ? எதிர்பார்த்து காத்திருக்கோம் - தொடர்ந்து கலக்குங்க.//

சீக்கிரமா எழுதுகிறேன் :) ரொம்ப நன்றி ரவீ:)

Mathu said...

Kumiththa said...
வாழ்த்துக்கள் மது! இது போல் இன்னும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.விருதுக்கு நன்றி.//

ரொம்ப நன்றி :)

Mathu said...

அதிரை ஜமால் said...
வாங்கியவருக்கும்

வழங்கியவருக்கும்

வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றி :)

Mathu said...

புதியவன் said...
இரண்டாவது முறையாக
பாட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு
வாழ்த்துக்கள் மது...//

மன்னிக்கவும் புதியவன்...இந்த கமெண்ட் பாத்த பிறகுதான் நீங்களும் விருது தந்திருப்பது தெரிய வந்தது....மகிழ்ச்சி...அண்ட் ரொம்ப நன்றி..:)

Mathu said...

சகாராவின் புன்னகை said...
//என் வலைப்பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும், சிறந்த இடுகைகளை எழுதும் சகாராவின் புன்னைகை க்கும்//

//இந்த Butterfly விருதை வழங்குகிறேன்.//

நன்றி மது,

ஆனால் தங்களுடைய இணைய தளத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை வன்மையாக (மறுக்கிறேன்) எதிர்க்கிறேன். தாங்கள் busy ஆக இருப்பதனாலேயே அதிகம் தொல்லை செய்வதில்லை. ஆனாலும் உன்னிப்பாக கவனிக்கிறோம், அருமயான கவிதாயினி ஒருவர் உருவாகிறர்.
அன்போடும் வாழ்த்துக்களோடும்

ப.அருள்நேசன்//


மகிழ்ச்சி அருள்நேசன் :) வாழ்த்துக்களுக்கு நன்றி :)

MSK / Saravana said...

மது........ என்ன இதெல்லாம்.. இப்படி மாட்டி விட்டுட்டீங்களே..

MSK / Saravana said...

நன்றி மது.. நானும் யாரையாவது புடிச்சி போடறேன்..

Mathu said...

Saravana kumar: நல்லது :) நீங்க கட்டாயம் குடுக்கணும் என்று இல்லை...so, சந்தோஷப்படுங்க :))