Tuesday, July 29, 2008

என்ன எழுத...

என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஏதாவது கவிதை எழுத நினைத்தால், தற்போது கற்பனை குதிரை Hibernation mood'ல் உள்ளது போலும், கவிதைக்கு தூரமாகவே இருக்கிறது கற்பனை. அதுசரி, blog எழுத வந்த பின்புதானே புரிகிறது கவிதை எழுதுவதென்றால், ஒன்று கவிஞராக இருக்க வேண்டும் அல்லது அனுபவம் வேண்டும் என்று...அதுதான் காதல் அனுபவம். இரண்டும் இல்லாமல் கவிதை எழுத உட்காருவது மடமைத்தனம்! சரி எழுதினால் கவிதைதான் எழுத வேண்டும் என்று என்ன சட்டமா உள்ளது ..கதையில் கவனம் செலுத்துவோம் என முடிவு செய்து எழுதினேன் ஒரு கதை.. பாதியிலேயே stopped! வேறென்ன எழுதலாம்? கட்டுரை போட்டியில் பரிசுகள் வென்ற எனக்கு உண்மைகளை உதாரணங்களுடன் இணைக்க மட்டும்தான் முடிகிறது...இல்லாததை எழுத செலவு கூடுகிறது -நேரத்தை சொன்னேன்.

வேறென்ன செய்யலாம்? எனக்கு பொதுவாக நண்பிகளிடம் தொலைபேசியில் அரட்டை அடிப்பது என்பது பிடிக்காத விடயம்...பிடிக்காது என்பதை விட அவ்வளவாக விரும்பாத/ ரசிக்காத என சொல்லலாம்.
ஆனால் எனக்கு எப்பொழுதுமே சலிக்காத விடயம் ஒன்று உண்டு. நான் என்ன மூடில் இருந்தாலும் பாடல்கள் கேட்பது பிடிக்கும். இப்போது எனது செவிகளில் தேன் தெளித்துகொண்டிருக்கும் பாடல்..''ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா...ஆயிரம் ஆடலும் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா.." வல்லமை தாராயோ'விலிருந்து.
It really has some magic that it pierces into the nerves!
Music என்பது எந்த ஒரு மனிதனையும் உருக வைத்துவிடும்.
Some sort of wonder it is!
நான் உங்களை இன்னுமா போர் அடித்துகொண்டிருக்கிறேன்? இதுவரை வாசித்ததற்கு நன்றி.
அட, நான் ஒரு பதிவு எழுதி விட்டேனே! :)) LOL.

18 comments:

MSK / Saravana said...

//தற்போது கற்பனை குதிரை Hibernation mood'ல் உள்ளது போலும்,//


நல்லா இருக்கு.. The way of saying..

MSK / Saravana said...

//அனுபவம் வேண்டும் என்று...அதுதான் காதல் அனுபவம்.//

என்னது.. அப்படியா???
:) :)

MSK / Saravana said...

//அட, நான் ஒரு பதிவு எழுதி விட்டேனே! :)) LOL.//

இன்னும் நிறைய எழுதுங்கள்.

இங்கு வந்து பாருங்கள்..
http://www.tamilmanam.net/

எப்படி எப்படியோ எழுதலாம்... ரசிக்கும்படி இருந்தால் போதும்..

Kumiththa said...

எந்த mood லயும் music கேட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும் என்றே சொல்லலாம். music க்கு அவளவு சக்தி...

Mathu said...

M.Saravana Kumar said...
//தற்போது கற்பனை குதிரை Hibernation mood'ல் உள்ளது போலும்,//


நல்லா இருக்கு.. The way of saying..

Thanks

Mathu said...

M.Saravana Kumar said...
//அனுபவம் வேண்டும் என்று...அதுதான் காதல் அனுபவம்.//

என்னது.. அப்படியா???
:) :)

இல்லையா பின்னே? காதல் அனுபவம் இருந்தால் கவிதை தானாக வருமாமே...கேள்விப்பட்டதுண்டு..

Mathu said...

M.Saravana Kumar said...
//அட, நான் ஒரு பதிவு எழுதி விட்டேனே! :)) LOL.//

இன்னும் நிறைய எழுதுங்கள்.

இங்கு வந்து பாருங்கள்..
http://www.tamilmanam.net/

எப்படி எப்படியோ எழுதலாம்... ரசிக்கும்படி இருந்தால் போதும்..

Thanks :)ஊக்கத்திற்கு நன்றி.

Mathu said...

Kumiththa said...
எந்த mood லயும் music கேட்டால் மனதுக்கு நிம்மதியாக இருக்கும் என்றே சொல்லலாம். music க்கு அவளவு சக்தி...

அதைத்தான் நானும் சொன்னேன்.lol just kidding. Music is indeed powerful ;)கமெண்ட்'கு தாங்க்ஸ் குமித்தா

Divya said...

Hi Mathu........

என்ன எழுதுவதென்று....யோசித்ததையே ஒரு பதிவாக எழுதிட்டீங்க:)))

நேரில் பேசுவது போல் இருந்தது உங்கள் எழுத்து நடை!!

கவிதைகள் தான் எழுத வேண்டும் என இல்லையே மது......அது 'காதல்' அனுபவம் இருந்தால் தான் கவிதை எழுத முடியும் என்றால்.......ரொம்ப கஷ்டம்!!

இது மாதிரி உங்கள் எண்ணங்களை கூட பதிவாக பதிக்கலாம்....படிக்க நாங்க ரெடி மது!!!

Divya said...

\கதையில் கவனம் செலுத்துவோம் என முடிவு செய்து எழுதினேன் ஒரு கதை.. பாதியிலேயே stopped! \\

ஏன் நிறுத்திட்டீங்க மது.....தொடரலாமே....முயற்சி செய்து பாருங்க ப்ளீஸ்!!

Mathu said...

Divya said...
Hi Mathu........

என்ன எழுதுவதென்று....யோசித்ததையே ஒரு பதிவாக எழுதிட்டீங்க:)))

நேரில் பேசுவது போல் இருந்தது உங்கள் எழுத்து நடை!!

கவிதைகள் தான் எழுத வேண்டும் என இல்லையே மது......அது 'காதல்' அனுபவம் இருந்தால் தான் கவிதை எழுத முடியும் என்றால்.......ரொம்ப கஷ்டம்!!

இது மாதிரி உங்கள் எண்ணங்களை கூட பதிவாக பதிக்கலாம்....படிக்க நாங்க ரெடி மது!!!

ரொம்ப நன்றி திவ்யா..:))

Mathu said...

Divya said...
\கதையில் கவனம் செலுத்துவோம் என முடிவு செய்து எழுதினேன் ஒரு கதை.. பாதியிலேயே stopped! \\

ஏன் நிறுத்திட்டீங்க மது.....தொடரலாமே....முயற்சி செய்து பாருங்க ப்ளீஸ்!!
நான் எல்லாம் கதை எழுத போனா, உங்களை மாதிரி எழுத்தாளர் எல்லாம் சகிக்க முடியாம இருக்கும். முயற்சிக்கிறேன். ஊக்கத்திற்கு மிக்க நன்றி திவ்யா :)

MSK / Saravana said...

//இல்லையா பின்னே? காதல் அனுபவம் இருந்தால் கவிதை தானாக வருமாமே...கேள்விப்பட்டதுண்டு...//

அப்படியா???
:) :)

நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன்..
:)

MSK / Saravana said...

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)

MSK / Saravana said...

உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.. என் வலைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்.
(இப்படித்தான் என்கிட்டே மறுபடியும் சொன்னாங்க)

Mathu said...

M.Saravana Kumar said...
உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.. என் வலைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்.
(இப்படித்தான் என்கிட்டே மறுபடியும் சொன்னாங்க)

DONE! :) Thanks!

- இரவீ - said...

எப்படி இருந்த நீங்க - இப்படி ஆய்டீங்க?
ஹனுமனுக்கு கூட தன் வலிமை தனக்கே தெரியாதாம்,
காதலா? கவிதையா? என இருந்த நீங்க இன்றைய தினத்தில்
பல கவிதைக்கும் - கருத்துக்கும் சொந்தக்காரர்.
தொடரட்டும் - தன்னாய்வு.

Mathu said...

Ravee (இரவீ ) said...
//எப்படி இருந்த நீங்க - இப்படி ஆய்டீங்க?
ஹனுமனுக்கு கூட தன் வலிமை தனக்கே தெரியாதாம்,
காதலா? கவிதையா? என இருந்த நீங்க இன்றைய தினத்தில்
பல கவிதைக்கும் - கருத்துக்கும் சொந்தக்காரர்.
தொடரட்டும் - தன்னாய்வு//


Hehehe...நன்றி ரவீ :) ரொம்ப புகழ்றீங்க....வருகைக்கும் தருகைக்கும் ரொம்ப மகிழ்ச்சி :))